சமீபத்திய வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட திரெங்கானு மாநிலவாசிகளுக்கு மேலும் சோகத்தில் ஆழ்த்தும் விதமாக அங்குள்ள ஆறுகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் அம்மாநிலத்தில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், மாநிலத்தில் உள்ள மூன்று ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியிருப்பதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு ஏற்ற சூழல் காணப்படுவதால அவர்கள் தயாராக இருக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஜம்படான் ஜெராங்காவில் உள்ள சுங்கை டுங்கூன், பயா பமன் பம்ப் ஹவுஸில் உள்ள சுங்கை கெமாமன் மற்றும் கம்பங் ஜெராமில் எஸ்ஜி நெராஸ் ஆகிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளன.