மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்ததில் ஆடவர் பலி, மற்றொருவர் படுகாயம்

ஜாலான் சிரம்பான்-தாம்பின் என்ற இடத்தில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், அவரது நண்பர் பலத்த காயமடைந்தார் என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் தெரிவித்தார்.

நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ரெம்பாவைச் சேர்ந்த 21 வயதான முஹமட் இக்ராம் முகமட் யாசித், தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.

சிலாங்கூர் மாநிலம் ஸ்ரீ கெம்பாங்கனைச் சேர்ந்த 18 வயதான அம்மார் ஜரீப் முகமட் ஜுனைடி என்ற அவரது உடலில் பலத்த காயம் அடைந்து ரெம்பாவ் மருத்துவமனை சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர்கள் செனவாங்கிலிருந்து ரெம்பாவ் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் இடது ஓரத்தில் இருந்த மரம், வேரோடு சாய்ந்து அவர்கள் மீது சரிந்தது.

விபத்து நடந்த இடம் இருவழி நேரான சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இருட்டாக இருந்தது என்றும் ஆனால் விபத்து நடந்தபோது வானிலை நன்றாக இருந்தது ”என்றும் அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இறந்தவரது உடல் துவாங்கு ஜாபர் மருத்துவமனை தடயவியல் துறைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here