இன்று காலை 8 மணி நிலவரப்படி, பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
தற்போது ஆறு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 35 பேர் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, பேராக் பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணிக்கு ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்ததுடன் ஒப்பிடுகையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.