அம்னோ பொதுப் பேரவையில் சுமார் 2,822 பேர் கலந்து கொள்வார்கள் – அஹ்மட் மஸ்லான்

கோலாலம்பூர்:

எதிர்வரும் 11 ஆம் தேதியிலிருந்து 14-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2022-ஆம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில், இதற்கு முன்னரைப் போல் இல்லாமல் சிறப்பு பார்வையாளராக தகவல் பிரிவுத் தலைவர்களும் கட்சியின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 2,822-கும் மேற்பட்ட பேராளர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக, அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

பொதுப் பேரவைக் குறித்து தங்கள் தொகுதிகளில் அடிமட்ட அளவில் விளக்கமளிக்க தகவல் பிரிவு தலைவர்கள் முக்கிய பங்காற்றுவதே இதற்கு காரணம் என்று அவர் மேலும் கூறினார்.

மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறும் 2022-ஆம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில், அக்கட்சி தலைவரின் கொள்கை உரை தீர்மானம் அதாவது பொருளாதாரம், கல்வி, சமயம், நாடு மற்றும் மலாய்க்காரர்களின் நலன் குறித்த விவகாரங்கள் ஆகியவைத் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இருக்கும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here