இந்தியாவின் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் 6 பேர் பலி -170 பேர் காயம்

குஜராத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பட்டம் விடும் திருவிழா இந்த ஆண்டு சோகத்தில் முடிந்தது. கடந்த ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் மாஞ்சா நூல்கள் அறுத்து மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 170 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குறித்த இரண்டு நாட்களில் மட்டும் மாஞ்சா நூல்களால் சுமார் 1,280 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழர்களாகிய நாம் ஜனவரி (தை 1) மாதம் கொண்டாடும் தைப்பொங்கல் போல, குஜராத்திகளால் அன்றைய தினம் பட்டம் விடும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here