Kampung Jawa, Jalan Guru வில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசமானதாக, தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், சுகுர் ஹட்டா கூறினார்.
இன்று நண்பகல் 12.38 மணியளவில் சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தது, அதைத் தொடர்ந்து 40 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு மூன்று இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
“சம்பவ இடத்திற்கு வந்தபோது, அங்குள்ள மர வீடுகளில் தீ பிடித்ததையும், வெப்பமான வானிலை மற்றும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி வருவதையும் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்தார்கள் என்றும் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.