சுபாங் ஜெயாவில் இந்தியப் பிரஜை கொலை செய்யப்பட்ட வழக்கு : சந்தேக நபர்களின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிப்பு

கடந்த ஆண்டு மே மாதம் 25 வயதான இந்தியப்பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்டு, சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு பின்னால் புதைக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய, இரண்டு இந்தியர்களின் தடுப்புக் காவல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் இன்னொரு ஆடவருக்கான விளக்கமறியல் உத்தரவு பிப்ரவரி 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

அவர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 11) முடிவடைந்ததை தொடர்ந்து, அது நீட்டிக்கப்பட்டதாகவும், எஞ்சிய மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவியுடன் சந்தேக நபர் தொடர்பு வைத்திருந்தார் எனவும் நம்பப்படுகிறது. மேலும் தொடர் விசாரணையில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் ஒரே முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here