ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தானிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இருப்பினும் சுனாமி ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை என்று அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் 97 கிமீ (60.27 மைல்) ஆழத்தில் இருந்ததாக அது மேலும் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் அறிய முடியவில்லை.
-ராய்ட்டர்ஸ்