மனிதர்களை மிருகமாக்கும் ஜாம்பி போதைப்பொருள்….! இதுவரை அமெரிக்காவில் 2,668 பேர் பலி..!

அமெரிக்காவில் போதைப்பொருட்களை அளவுக்கதிகமாக எடுத்து தடுமாறும் மக்கள் அமெரிக்க தெருக்களில் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நபர் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் இறப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இப்போது ஒரு புதிய போதை மருந்து அமெரிக்க தெருக்களில் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது, உண்மையில் அது மக்களின் தோலை அழுக செய்கிறது. அமெரிக்காவில் புதிதாக போதைப் பொருள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பெயர் டிரான்ஸ் (tranq) அல்லது சைலாசின்(Xylazine). இந்த போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனை ஜாம்பி போதைப்பொருள் ( Zombie Drug) என அழைக்கிறார்கள்.

பொதுவாக இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கீரிக்கப்பட்ட மருந்து. இதனை விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவமனைகளில் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை வைத்து தான் இந்த கொடூர போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது.

சைலாசின் மனிதர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அதுவும் இதனை ஓவர் டோஸ் எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஜாம்பி போதைப்பொருளை பயன்படுத்தினால் அடுத்த சில நாட்களுக்கு தூக்கமே வராதாம். அதோடு தீவிர மன அழுத்தம், கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படுமாம். அதனை அப்படி கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடுமாம்.

இந்த போதை பொருள் பயன்படுத்தியதும் உச்சகட்ட போதை அடைவதால், அதனை பயன்படுத்துபவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்களாம். அதோடு அவர்களுக்கு எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காதாம். ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒருசிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளை பயன்படுத்தி அதனால் பாதிக்கப்பட்ட 28 வயதான இளைஞர் ஒருவர் அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 9 மாதங்களுக்கு முன் அந்த போதைப் பொருளை ஒருமுறை பயன்படுத்தியதாகவும், இப்போது கால் மற்றும் பாதத்தில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு மட்டும் நியூயார்க்கில் 2,668 பேர் இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த போதைப் பொருளை அப்படியே தடுக்காமல் விட்டால், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட உலகம் முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here