இன்று காலை நிலவரப்படி, ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் சபா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,467 பேராக அதிகரித்துள்ளது.
ஏனைய மாநிலங்களை விட ஜோகூர் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதுடன் , அங்கு மொத்தம் 25,213 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.
பகாங்கில், 374 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,375 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் அங்கு இயங்கிவரும் 26 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், நெகிரி செம்பிலானில், இரவு 9 மணி நிலவரப்படி 145 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இன்று அதிகாலை 4 மணிக்கு 704 பேராக அதிகரித்ததாகவும், தற்போது அங்கு 10 துயர் துடைப்பு மையங்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் மாநில APM இயக்குனர் லெப்டினன்ட் கேணல், முஹமட் நஸ்ரி மெஸ் காம் கூறினார்.
மலாக்காவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, 21 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேராக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், சபாவில், 24 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேராக உள்ளதாக கூறப்படுகிறது.