மெர்சிங்கின் ஜாலான் நிடார் உத்தாமாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, காணாமல் போனதாக தேடப்படும் பெண் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
இன்று (மார்ச் 6) காலை 6.49 மணியளவில், குறித்த சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்திற்கு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மெர்சிங் மற்றும் எண்டாவ் தீயணைப்பு நிலையங்களில் இருந்து பதினொரு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்” என்று, மெர்சிங் தீயணைப்பு நிலையத் தலைவர், அப்துல் முயிஸ் மொக்தார் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற கார், வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுவதாகவும், இதுவரை அவரது காரோ அல்லது அபெண்ணோ இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், தேடல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஜோகூர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.