MRR2 வில் நடந்த விபத்தில் ஒருவர் மரணம்

தலைநகரிலுள்ள பண்டார் தாசிக் செலாத்தான் அருகே ஜாலான் லிங்கரான் தெங்கா 2 (MRR2) இல் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

இன்று காலை 7.30 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தவுடன், ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தீயணைப்பு இயந்திரம் அந்த இடத்திற்குச் சென்றது என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கோலாலம்பூர் செயல்பாட்டு மையம் (PGOKL) தெரிவித்துள்ளது.

“பண்டார் தாசிக் செலாத்தானில் உள்ள ஷெல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் குறித்த இரு வாகனங்களுக் விபத்துக்குள்ளானது.

“இதில் நிசான் அல்மேராவை ஓட்டிச் சென்ற 46 வயதான உள்ளூர் ஆண் ஒருவர் வாகனத்தில் சிக்கியிருந்தார், அவரை உறுப்பினர்களால் வெற்றிகரமாக வெளியேற்றினர்.

ஆனாலும் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக கெபாங்சான் மலேசியா பல்கலைக்கழக மருத்துவமனை (HUKM) துணை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் அடுத்த நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here