இஸ்லாமோஃபோபியா வெறுப்பு, வன்முறைச் செயல்கள் நிராகரிக்கப்பட வேண்டும்

இஸ்லாமோஃபோபியா மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் தனிநபர்களுக்கு எதிரான அனைத்து வெறுப்பு மற்றும் வன்முறைச் செயல்களும் நிராகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  கூறினார்.

அதை அடைய, மலேசியா உலக சமூகத்துடன் ஆக்கப்பூர்வமாகவும் கூட்டாகவும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது என்றார். மார்ச் 15 அன்று இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்துலக தினத்தை நினைவுகூருவதில் மலேசியா முழு மனதுடன் உலக சமூகத்துடன் இணைகிறது.

இது கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல, மாறாக உலக சமூகத்தின் விழிப்புணர்வை அதிகரிக்கவும், இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கையின் அவசியத்தை அதிகரிக்கவும் ஒரு நாள் என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை விரைவில் வரவேற்க உள்ளதால், மலேசிய மதானியின் கருத்துக்கு ஏற்ப நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புனித மாதத்தைக் கொண்டாடுவதில் தீவிரவாத சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here