ஜோகூரில் இன்னமும் 29,063 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

ஜோகூர்:

ஜோகூரில் 29,063 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள 99 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை தாங்காக்கிலுள்ள நிவாரண மையத்தில் தங்கியிருந்த 24 பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜோகூரில் வெள்ளத்தில் இருந்து மீண்ட சமீபத்திய மாவட்டமாக தாங்காக் உள்ளது என்று, ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) தெரிவித்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி, ஜோகூரிலுள்ள எந்த மாவட்டத்திலும் தொடர்ச்சியான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எந்த எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை, முன்பு அபாய மட்டத்தில் இருந்த அனைத்து ஆறுகளும் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here