மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை மார்ச் 23 ரமலான் நோன்பை தொடங்குகின்றனர்

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை (மார்ச் 23) புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் நோன்பு நோற்கத் தொடங்குவார்கள் என்று, அரசு முத்திரைக் காப்பாளர், டான்ஸ்ரீ சையத் டேனியல் சையத் அஹ்மட் அறிவித்தார்.

மாநில ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா உத்தரவின் பேரில், மலேசியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கான ரமலான் நோன்பு தொடக்கத் தேதி அறிவிக்கப்பட்டதாக சையத் டேனியல் கூறினார்.

மேலும் இந்த அறிவிப்பு இன்று இரவு Radio Televisyen Malaysia (RTM) மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அத்தோடு ரமலான் பிறை பார்க்கும் செயல்முறை நாடு முழுவதும் உள்ள 29 இடங்களில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here