PPR வீடமைப்புக்காக நெகிரி செம்பிலான் மாநில அரசு மூன்று இடங்களில் நிலத்தை வழங்கியுள்ளது – மந்திரி பெசார்

நெகிரி செம்பிலான் அரசாங்கம், மத்திய அரசின் மக்கள் வீட்டுத் திட்டம் (PPR ) திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மூன்று மாவட்டங்களில் நிலம் வழங்கியுள்ளது என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

குறித்த நிலம் 8 ஹெக்டேர் முதல் 12 ஹெக்டேர் வரை உள்ளதாகவும், ஜெம்போல், தாம்பின் மற்றும் சிரம்பான் ஆகிய இடங்களில் அவை உள்ளதாகவும், அடுத்த ஆண்டு PPR திட்டங்களுக்காக உள்ளாட்சி அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அவை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று புதன்கிழமை (மார்ச் 22) ரெம்பாவ் மாவட்ட கவுன்சிலுக்கான புதிய லோகோவை அறிமுகப்படுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த PPR வீட்டுத்திடடத்தின் மூலம் அதிகமான மக்கள் வீடுகளை பெறுவதற்கு எங்கள் அரசு பங்களிப்பு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறிய அமினுடின், இத்திட்டம் மக்களின் நலனுக்காக இருந்ததால், தமது நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருந்து வரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here