கிள்ளான்: வரவிருக்கும் சிலாங்கூர் தேர்தல் முடிவுகள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு “litmus test” என்று கோபிந்த் சிங் தியோ கூறுகிறார். வரும் சிலாங்கூர் தேர்தலில் நாங்கள் தோல்வியை சந்திக்க முடியாது என்று கோபிந்த் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) மாநில டிஏபி ஆண்டு மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய சிலாங்கூர் டிஏபி தலைவர், கட்சியின் உறுப்பினர்கள் அம்னோ, ஜிபிஎஸ் மற்றும் ஜிஆர்எஸ் ஆகியவற்றுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டாட்சி மட்டத்தில் உள்ள ஒற்றுமை அரசாங்கம் நிலையானது என்றும், அது தொடர்ந்து தேசத்தை நிர்வகிப்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஒற்றுமையின் மூலம் தேசத்தில் ஸ்திரத்தன்மையை திரும்பப் பெற முடியும் என்று கூறிய கோபிந்த், அது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
ஒரு நிலையான நாடு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும் என்று அவர் கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி மற்றும் பக்காத்தான் கூறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.