கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ தடை விதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
மத்திய அரசு நடத்தும் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் வந்ததாகக் கேள்விப்பட்டதில்லை.
வியாழன் (மார்ச் 30) மஸ்ஜித் ஜமேக் கம்பூங் சுங்கை கெர்சிக்கில் நடந்த Santunan Kasih Ramadan நிகழ்ச்சிக்குப் பிறகு துணைப் பிரதமர் நிருபர்களிடம், “ஒருவேளை கெடா மந்திரி பெசார் அத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யப்பட்டதாகக் கூறுவதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவைக் காட்டலாம்” என்று கூறினார்.
மே 23 முதல் 27 வரை நடைபெற உள்ள லங்காவி அனைத்துலக கடல் மற்றும் விண்வெளி கண்காட்சி 2023 உட்பட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் இருந்து தாம் தடை செய்யப்பட்டதாக முகமது சனுசி முகநூல் பதிவில் குற்றம் சாட்டினார்.