சாலை விபத்தில் தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் பலி; இருவர் படுகாயம்

பொந்தியானில் ஜாலான் பாரிட் செமரா-பாரிட் குடுஸ் என்ற இடத்தில் நடந்த விபத்தில் தந்தை மற்றும் அவரது மகன் உட்பட மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

வெள்ளை நிற காரில் பயணித்த முஹமட் ஷா ரிசல் ஜமாலுதீன் 22, அவரது தந்தை ஜமாலுதீன் அப்துல் வஹாப் 58, மற்றும் அவர்களது உறவினர் முஹமட் நோர் அஸ்லான் ரோஸ் 28, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொந்தியான் ஓசிபிடி துணைத் தலைவர் முகமது ஷோபி தாயிப் தெரிவித்தார்.

மற்றொரு பயணியான முகமட் பைசல் சாரி 35, மற்றும் கறுப்பு வாகனத்தின் ஓட்டுநர் டோனி டவ் 20, ஆகியோர் காயமடைந்ததாக அவர் கூறினார். வெள்ளை நிற கார் பாரிட் செமராவிலிருந்து பாரிட் குடுஸ் நோக்கிச் சென்றதாக நம்பப்படுவதாகவும், மற்ற வாகனம் எதிர் திசையில் இருந்து வந்ததாகவும் அவர் கூறினார்.

முஹமட் ஷா ரிசால் கட்டுப்பாட்டை இழந்து கருப்பு நிற வாகனத்தின் மீது மோதியதில் கார் தண்ணீர் பள்ளத்தில் விழுந்தது. இதன் விளைவாக அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது  என்று அவர் வியாழக்கிழமை இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உடல்கள் மேல் நடவடிக்கைக்காக பொந்தியான் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டன. அதே மருத்துவமனையில் முகமது பைசல் மற்றும் டோனி சிகிச்சை பெற்று வருகின்றனர்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here