செம்பூர்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள கடை வரிசைக்கு முன்னால் நிறுத்தபட்டிருந்த ஒரு காரில் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
40 வயதுடைய அந்த நபர் ஒரு பெண்ணுடன் காருக்குள் சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட பொதுமக்கள், காலை 9.10 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் என்று, செம்பூர்ணா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.
பாதிக்கப்பட்டவர், IMM13 ஆவணத்தை வைத்திருந்தார் என்றும், ஆனாலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் குறித்த ஆடவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இதற்கிடையில், பாதிக்கப்படடவருடன் கூட இருந்த 25 வயதான உள்ளூர் பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
“பாதிக்கப்பட்ட இருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பிரேத பரிசோதனை செயல்முறை நிலுவையில் உள்ளதால், மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முகமட் ஃபர்ஹான் கூறினார்.