இங்கு தனது 10 மாத மகனை துஷ்பிரயோகம் செய்ததாக 26 வயது இல்லத்தரசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் (ஏப்ரல் 6) மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் உட்டாமாவில் உள்ள அவரது வீட்டில் அந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா OCPD முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
குழந்தைகள் சட்டம் 2001இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் சனிக்கிழமை (ஏப்ரல் 8) தொடர்பு கொண்ட போது கூறினார். குழந்தையின் உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தன என்றார். அவர் இன்னும் ஷா ஆலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேகத்திற்கிடமான துன்புறுத்தல் குறித்து மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் போலீஸ் புகாரினை பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார். சந்தேக நபரின் கணவர் தடுத்து வைக்கப்படவில்லை. இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்துவோம் என்றார்.