பாசீர் கூடாங்கில் 400க்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் – பெண் ஒருவர் கைது

பாசீர் கூடாங்கிலுள்ள ஜாலான் பெகெலிலிங்கில் வர்த்தகர்களிடம் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து, 4,660 ரிங்கிட் மதிப்புள்ள 400க்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 7.05 மணியளவில் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த துணைக் காவலர்கள் குழு அதன் கார் நிறுத்துமிடத்தில் இயங்கும் வர்த்தகர்களிடம் சோதனை நடத்தியதாக, ஸ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறை தலைவர் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

“சோதனைகளைத் தொடர்ந்து, வரி செலுத்தப்படாதவை என்று நம்பப்படும் மொத்தம் 469 சிகரெட் பெட்டிகளை கண்டுபிடித்தனர்.

மேலும் அவற்றை வைத்திருந்த 60 வயதுடைய ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் 1976 ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் பிரிவு 116 C இன் கீழ், ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

சட்டவிரோதமான சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135(1)(d)இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here