மூவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் இருவர் மரணம் -ஒருவர் படுகாயம்

நேற்றிரவு மூவர் பயணம் செய்த ஹோண்டா சிவிக் கார், ஜாலான் குளுவாங், பத்து பகாட்டின் 11வது கிலோமீட்டரிலுள்ள ஒரு வாகனசேவை மையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நான்கு வாகனங்களில் மோதியதில், இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் தியோ காய் ஹாங், 22, மற்றும் பின்பக்க இருக்கைப் பயணியான மார்கஸ் தியோ ஹோவ் யூ, 19, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றும் பலத்த காயமடைந்த 19 வயது முன்பக்க இருக்கைப் பயணி இதுவரை அடையாளம் காணப்படவில்லை, பலத்த காயமடைந்த முன்பக்க இருக்கைப் பயணி சிகிச்சைக்காக பத்து பகாட், சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், பத்து பகாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

சம்பவத்திற்கு முன், பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

“நள்ளிரவு 12.50 மணியளவில் ஹோண்டா சிவிக் கார் இடதுபுறமாக சறுக்கி சர்வீஸ் சென்டருக்கு முன்னால் நான்கு வாகனங்கள் மீது மோதியதில், இவ்விபத்து நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987ன் பிரிவு 41(1)ன்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here