தோக் பாலி முகத்துவாரத்திலிருந்து 25 கடல் மைல் தொலைவில், மலேசிய கடல்சார் அமலாக்க படையின் கிளாந்தான் மாநில உறுப்பினர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, நேற்று பிற்பகல் 1 மணியளவில் நடுக்கடலில் வீசப்பட்ட 400,000 வெள்ளை சிகரெட்டுகள் அடங்கிய 40 பெட்டிகளை கண்டுபிடித்தனர்.
பெட்டிகள் அனைத்தையும் மீட்டு, கிளாந்தான் படகுத்துறைக்கு கொண்டுவந்ததாக அதன் இயக்குனர், கடல்சார் கேப்டன் சையத் நோர் அட்லி சையத் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“மேலும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 40 பழுப்பு நிற பெட்டிகளுக்கு 4 இலட்சம் வெள்ளை நிற சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது என்றுன், அவை கடத்தப்பட்டவை எனவும் நம்பப்படுகிறது.
கிளாந்தான் கடல்சார் அமலாக்கத்துறையின் ரோந்துப் படகு இருப்பதை கடத்தல்காரர்கள் கவனித்தவுடன், அவர்கள் அப்பொட்டலங்களை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் மொத்தப் பெறுமதி RM418,000 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று, சையத் நோர் அட்லி கூறினார்.
இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 இன் படி விசாரிக்கப்பட்டது.