சமீபத்திய வாரங்களில் கோவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும், நிலைமை இன்னும் கட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பரவும் கோவிட் -19 துணைவகைகள் ஓமிக்ரோன் வகையைச் சேர்ந்தவை, குறிப்பாக XBB1.5, 1.16 மற்றும் 1.9 என்பவை அடையாளம் காணப்பட்டன. இந்த துணை வகைகள் மிகவும் தொற்றுநோயாக இருந்தாலும், அறிகுறிகள் முன்னையது போல கடுமையாக இல்லை என்று சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா கூறினார்.
“கோவிட்-19 நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை” என்றும், குறிப்பாக நோன்புப்பெருநாள் கொண்டாட்டங்களின் போதும், அதிக சனா நெரிசல் உள்ள இடங்களில் முகக்கவசம் அணியுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்”.
மேலும் “கோவிட்-19 தொடர்பான அறிகுறி உள்ள நபர்கள் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ளுமாறும் ,”அவர் மேலும் கூறினார்.