புத்ராஜெயா: பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஹரி ராயாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு டோல் சாவடி கட்டணங்களுக்கு விலக்கினை அறிவித்துள்ளார். ஏப்ரல் 19 முதல் 21ம் தேதி வரையிலும், ஏப்ரல் 24ம் தேதியிலும் கட்டண விலக்கு அளிக்கப்படும். இது 33 நெடுஞ்சாலைகள் மற்றும் அனைத்து வாகன வகுப்புகளையும் உள்ளடக்கும் என்றார்.
ஹரிராயா பொது விடுமுறைகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட அனைத்துலக வானியல் மையம், ஹரிராயா ஏப்ரல் 21 அன்று கொண்டாடப்படும் என்று கணித்துள்ளது.