2023 மார்ச் மாதத்தில் மலேசியாவின் மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்து, 67 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (MAHB) தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பயணத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், இந்த மாதத்தில் பல்வேறு விமானப் பாதைகள் மீண்டும் தொடங்கப்படுவதாலும் இந்த பயணிகள் அதிகரிப்பு ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானச் செயல்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் தீவிரமாக மீண்டும் தொடங்குவது ஒரு நம்பிக்கையைத் தருகிறது, மேலும் இனிவரும் மாதங்களில் மலேசியாவிற்கு மேலும் பல புதிய விமானங்கள் வரும் என்று எதிர்பார்ப்பதாக அதன் இயக்குனர் டத்தோ இஸ்கந்தர் மிசல் மஹ்மூட் கூறினார்.