புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை டான்ஸ்ரீ மிச்செல் யோ சந்தித்தார். ஆஸ்கார் விருது வென்றவர் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் இன்னல்களையும் அகாடமி விருதை வென்றதில் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தையும் பகிர்ந்து கொண்டதாக அன்வார் வியாழக்கிழமை (ஏப்ரல் 20) முகநூலில் தெரிவித்தார்.
அவரது வெற்றி அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அனைத்துலக அரங்கில் நாட்டை உயர்த்திய மலேசிய மக்களுக்கும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற நான் அவரை வாழ்த்துகிறேன் என்று அன்வார் கூறினார்.