நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து, ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட Op Selamat 20 சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையில், கடந்த எட்டு நாட்களில் 17 இறப்புகளுடன் மொத்தம் 656 சாலை விபத்துக்கள் பகாங் மாநில காவல்துறை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற Op Selamat 18 உடன் ஒப்பிடும்போது விபத்துக்களின் எண்ணிக்கை 34 வழக்குகள் குறைந்துள்ளது, அதே நேரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை மூன்று வழக்குகளால் அதிகரித்துள்ளது என்று பகாங் மாநில காவல்துறை தலைவர், டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
அடிக்கடி விபத்து நடக்கும் இடங்கள் என அடையாளம் காணப்படாத பகுதியில்தான் இந்த அபாயகரமான விபத்துக்கள் பல நிகழ்ந்துள்ளது என்று பகுப்பாய்வு அறிக்கை காட்டுகிறது என்று அவர் கூறினார்.
மேலும், பல்வேறு குற்றங்களுக்காக 2,300 அபராதங்களும் விதிக்கப்பட்டன, அத்தோடு கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போலி பதிவு எண்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை, குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மொத்தம் 378 அதிகாரிகள் இந்த நடவடிக்கைக் காலம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.