பத்து பஹாட், கம்போங் சுங்கை சுலோவில் நாகப்பாம்பு ஒன்று வீட்டினுள் புகுந்து, அங்கிருந்தவர்களை கடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு மூத்த அதிகாரி மிருல் மிஸ்டர் கூறுகையில், அதிகாலை 1.30 மணியளவில் இரண்டு மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள ஊர்வன குறித்து தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், உடனடியாக ஆறு தீயணைப்பு வீரர்களை வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறினார்.
சமையலறையில் பாம்பு இருந்ததால் வீட்டின் உரிமையாளர் தடுமாறி விழுந்தார். நாங்கள் வந்து பார்த்தபோது நாகப்பாம்பு அருகில் உள்ள ஸ்டோர் ரூமில் தஞ்சம் அடைந்துள்ளது.