புத்ராஜெயாவில் கெத்தும் நீர் விற்பனை செய்த அரசு ஊழியர் கைது

புத்ராஜெயாவிலுள்ள மத்திய அரசு நிர்வாக மையத்தில், கெத்தும் நீர் வினியோகம் செய்த சந்தேகத்தின் பேரில், அரசு ஊழியர் ஒருவர், நேற்று கைது செய்யப்பட்டார்.

33 வயதான சந்தேக நபர் Presint 9 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஏ அஸ்மாதி அப்துல் அஜீஸ் கூறினார்.

சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்ததில், கெத்தும் நீர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எட்டு போத்தல்களையும் கண்டுபிடித்தனர்.

“சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here