கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்டிபி) தொடர்பான வழக்கு, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவச் சான்றிதழ் (MC) வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வாரம் நடைபெறவிருந்த வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (மே 11) உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காஜாங் சிறைச்சாலை மருத்துவ அதிகாரி டாக்டர் முகமட் ஹபீஸ் முகமட் ஹோஷ்னி, செவ்வாய்க்கிழமை (மே 9) காலை 7.15 மணிக்கு நஜிப்பின் உடல்நிலை குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். துணை அரசு வக்கீல் அஹ்மத் அக்ரம் கரீப்பின் விசாரணையின் போது, டாக்டர் முகமட் ஹபீஸ், தாம் வயிற்று வலி மற்றும் குமட்டல் மற்றும் நான்கு முறை கழிவறைக்கு செல்ல வேண்டியிருந்த நஜிப்பை சந்தித்ததாக கூறினார்.
நான் அவருக்கு சில மருந்துகளைக் கொடுத்தேன், ஆனால் 10 நிமிடங்களுக்குப் பிறகு அவரது நிலை அப்படியே இருந்தது. நான் அவரை சோதனை செய்தேன். அவர் உடலில் நீர் பற்றக்குறை மற்றும் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் லேசான காய்ச்சல் உள்ளது என்று அவர் கூறினார்.
நஜிப் களைப்பாகவும், சோம்பலாகவும், நீரிழப்புடன் காணப்பட்டதாகவும், பின்னர் காலை 9.30 மணியளவில் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (HKL) பரிந்துரைக்கப்பட்டதாகவும் மருத்துவர் மேலும் கூறினார்.