பெட்டாலிங் ஜெயா: தனது 14 வயது மகனை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் இன்று விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் மாற்றாந்தந்தை என நம்பப்படும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சௌஜனா உத்தாமா காவல் நிலையத்தில் 15 வயது சிறுமியும் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் ஷஃபாடன் அபு பக்கார் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் ஜனவரி மாதம் ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுவதாகவும், அப்போது சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் நாங்கள் கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தடுத்து வைப்போம். தடுப்புக்காவலின் காலம் நாளை நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்றார்.
குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 14(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக ஷஃபாடனை மேற்கோள் காட்டி உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், சிறுவனின் போலீஸ் புகாரைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 5 மற்றும் 14 இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று கோலா சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ரம்லி காசா கூறினார்.
பிரிவு 14 குழந்தை மீதான உடல்ரீதியான பாலியல் வன்கொடுமைகளைக் கையாள்கிறது. பிரிவு 5 சிறுவர் ஆபாசத்தை உருவாக்குவதைக் குறிக்கிறது. மே 4 அன்று, பெர்னாமா தனது 14 வயது மகனுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக 33 வயதுடைய பெண் ஐந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாக அறிவித்தது.
சமூக நலத் துறை அதிகாரியிடமிருந்து போலீசாருக்கு புகாரளிக்கப்பட்டதை அடுத்து, சந்தேகநபர், ஷா ஆலம், புஞ்சாக் ஆலத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
முகம் தெரியாத ஒருவரிடமிருந்து பெறப்பட்ட காணொளி மூலம் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகக் கூறப்படும் தகவல் கிடைத்ததையடுத்து, சமூக நல அதிகாரி போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.