மகனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் மீது இந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

கோல சிலாங்கூர்: தனது 14 வயது மகனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட பெண் மீது இந்த மாதம் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் ரம்லி காசா கூறுகையில், 33 வயது பெண் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முடிந்துவிட்டதாகவும், சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டுவதற்கான உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

சந்தேகநபர், சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 இன் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் சனிக்கிழமையன்று கோலா சிலாங்கூர் மற்றும் புக்கிட் மெலாவதி தொகுதிகளுக்கான ஹரி ராயா கூட்டத்திற்குப் பிறகு கூறினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட  பெண் மே 3ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து வீடியோ மூலம்  தகவலைப் பெற்ற சமூக நல இலாகா அதிகாரியின் புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் மே 2 அன்று புஞ்சாக் ஆலமில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்ற வழக்கின் விசாரணைக்காக சந்தேக நபர் சுங்கை பூலோ போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் மே 10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here