நேற்று மதியம் ஆற்றில் குளித்த 15 வயது சிறுவர்கள் இருவர், சுங்கை ரேஜாங்கின் பலத்த நீரோட்டத்தில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை 5 மணியளவில், பாதிக்கப்பட்ட இருவர் மற்றும் அவர்களது மற்றொரு நண்பர் ஆகியோர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
ஜஸ்டின் சியாவ் மற்றும் காங் வெய் செங் என அழைக்கப்படும் குறித்த இரண்டு சிறுவர்களும் திடீரென ஆற்றின் அடிப்பகுதிக்கு திடீரென இழுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுவதாக, சரவாக்கின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் (JBPM) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வேளையில் பாதிக்கப்பட்டவர்களின் மற்றொரு நண்பரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார், ஆனால் அவர் சம்பவத்தில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது.
“நேற்று மாலை 5.34 மணியளவில் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், சிபு ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் குழு தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைக்காக இடத்திற்குச் சென்றது,” என்று அவர் கூறினார்.
SAR குழு, நீர் மீட்புக் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் தேடல் நடவடிக்கையை 10 சதுர மீட்டர் பரப்பளவில் செயற்படுத்தினார், அதன்பின்னர் பாதிக்கப்பட்ட இருவர் நீரில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 5.34 மணிக்கு இடைநிறுத்தப்பட்ட தேடுதல் பணி இன்றும் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.