ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய டாக்டர் – 7 ஆண்டுகளுக்குப் பின் விடுவிப்பு

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் கென்னத் எலியட்,88. இவர் ஆப்பிரிக்க நாடான பர்கினோ புருசோவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மாலி நாட்டின் எல்லைக்கு அருகில் எலியட் தனது மனைவியுடன் சேர்த்து கடத்தப்பட்டார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. பின்னர் ஒரு மாதம் கழித்து எலியட்டின் மனைவி விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 7 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்ட எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வோங் கூறுகையில், `தற்போது நலமாக உள்ள எலியட் மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here