SPM முடிவுகள் ஜூன் 8 ஆம் தேதி வெளியிடப்படும்

2022 ஆம் ஆண்டிற்கான சிஜில் பெலாஜரான் மலேசியா (SPM) முடிவுகள் ஜூன் 8 அன்று வெளியிடப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது SPM முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் காலை 10 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தனியார் விண்ணப்பதாரர்கள் தபாலில் தமது பெறுபேறுகளின் முடிவுகளைப் பெறுவார்கள் அல்லது அவர்கள் தேர்வெழுத பதிவு செய்த மாநிலக் கல்வித் துறையை தொடர்பு கொள்ளலாம்” என்று அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை myresultspm.moe.gov.my இணையதளம் வழியாகவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை குறுஞ்செய்தி சேவைகள் (SMS) மூலம் SPM (இடைவெளி) அடையாள அட்டை இலக்கம் (இடைவெளி) வேட்பாளர் எண்ணை டைப் செய்து 15888 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் ஆன்லைனில் பார்க்கலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

“2022 ஆம் ஆண்டில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து SPM வேட்பாளர்களுக்கும் அமைச்சகம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது” என்று அமைச்சகம் அவ்வறிக்கையில் கூறியது.

நாடு முழுவதும் 3,355 தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு மொத்தம் 403,637 விண்ணப்பதாரர்கள் SPM தேர்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here