கெடா மற்றும் பெர்லிஸ் மாநில அரசுகள் 44.3 கிலோமீட்டர் நிலப்பரப்பு மற்றும் 5.6 கிமீ அல்லது மூன்று கடல் மைல் கடல் பரப்பை உள்ளடக்கிய கடல் எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
விஸ்மா தாருல் அமானில் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் மற்றும் பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லி இடையே ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை, ஆய்வு மற்றும் வரைபடத் துறையின் தலைமை இயக்குனர், முகமட் ஜாக்கி முகமட் கசாலி மற்றும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் புவியியல் மற்றும் நில அளவையியல் பிரிவு செயலாளர் டத்தோ முஹமட் யாசிர் யாஹ்யா ஆகியோர் நேரில் பார்த்தனர்.
நிலம் மற்றும் கடல் எல்லைகளை ஒரே நேரத்தில் இறுதி செய்ய முடிந்ததன் மூலம் இந்த ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு புதிய வரலாற்றை பதிவு செய்யும் என்று முஹமட் சனுசி கூறினார்.
இதற்கிடையில், கெடா மாநிலத்திற்கும் அண்டை மாநிலங்களான பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்களுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மாநில அரசுக்கு ஆய்வு மற்றும் வரைபடத் துறையின் ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் நிபுணத்துவம் தேவை என்றார்.