விளக்கு கம்பத்தில் கார் மோதியதில் 21 வயது ஆடவர் மரணம்

இன்று புதன்கிழமை (மே 31) கிள்ளானின் தாமான் செந்தோசாவில் உள்ள விளக்கு கம்பத்தில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட ஜெஃப்ரி லிம் சீ சுவான், 21, தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) ஹபிஷாம் முகமட் நூர் கூறினார்.

அதிகாலை 2.51 மணிக்கு தமக்கு குறித்த சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தது என்றும், உடனே அண்டலாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு பணியாளர்களும் ஒரு அதிகாரியும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

“கார் விளக்கு கம்பத்தில் மோதுவதற்கு முன், வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் சுயநினைவின்றி காருக்குள் சிக்கிக் கொண்டிருந்தார், ஆனால் அவர் பலத்த காயங்கள் காரணமாக இறந்தார் என்றும், “பாதிக்கப்பட்டவரின் சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here