இந்தாண்டு ஜனவரி முதல் மே வரை முகநூல் சம்பந்தப்பட்ட 744 மோசடி புகார்களை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து டெலிகிராம் 17 வழக்குகள், வாட்ஸ்அப் 16, இன்ஸ்டாகிராம் 7 மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஒன்று என சம்பவங்கள் தொடர்பிலும் புகார்கள் கிடைக்கப்பெற்றதாக தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
அரசாங்கத்திற்கும் சமூக ஊடக தள வழங்குநர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன, இதனால் இதுபோன்ற குற்ற வழக்குகள் குறித்து உடனடியாக செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.