திடீர் வெள்ளத்தின் போது வாகனத்தில் சிக்கி கொண்ட மாதுவின் பயமான தருணம்

ஜாலான் மேரு, கிள்ளான் சென்ட்ரல் அருகே இன்று காலை ஏற்பட்ட  திடீர் வெள்ளத்தின் போது 57 வயதான பெண் ஒருவர் தனது வாகனத்தில் சிக்கியபோது பயண தருணங்களை எதிர்கொண்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறுகையில், அதிகாலை 5.44 மணியளவில் அந்தப் பெண் வெள்ளம் சூழ்ந்த சாலையின் வழியாகச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அப்போது பெய்த கனமழை காரணமாக அவரது வாகனம் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், அவரது வாகனம் தண்ணீரில் மூழ்குவதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு திடீர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தீயணைப்பாளர்கள் அப்பகுதியை அடைவதற்குள் அந்தப் பெண் பொதுமக்களின் உதவியுடன் தனது காரில் இருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அருகிலுள்ள வாய்க்காலில் இருந்து தண்ணீர் நிரம்பி 1.3 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நீர் மட்டம் குறைந்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here