பினாங்கு-கெடா எல்லை தொடர்பில் போலியான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

பினாங்கு-கெடா எல்லை குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸி தெரிவித்தார்.

கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பினாங்கின் வரைவிலக்கணத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

“எந்தச் சட்டத்தின் கீழும் (அதே சமயம்) எந்தச் சட்டத்தின் மூலம் குற்றச்சாட்டை சுமத்தலாமா என்பதை சட்டத்துறையிடம் முடிவு செய்ய காவல்துறைக்கு சுதந்திரம் உள்ளது,” என்று அவர் நேற்று நடந்த மதானி சமூக அறிமுகத்திற்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

அரசியலமைப்பில் ‘பினாங்கு மாநிலம்’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை இல்லை என்றும், ஏதேனும் ஒரு கட்சி சாதகமாகப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்ப முயற்சித்தால், இதுபோன்ற போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பினாங்கு இன்னும் கெடாவுக்கு சொந்தமானது என்று கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹமட் நூர் கூறியது குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here