கோம்பாக்கில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உட்பட மூவர் காயம்

கோம்பாக், ஜாலான் சுங்கை பூசுவில், இன்று, கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 2 வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், பிற்பகல் 2.35 மணியளவில் தமக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குனர், முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, அவசர அழைப்பு வந்தவுடன், செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்களைக் கொண்ட இயந்திரம் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

அவர்கள் அங்கு வந்தபோது, “35 வயதான குடும்பத் தலைவரைக் கொண்ட உள்ளூர் குடும்பம் ஒன்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தது, அதில் 30 வயது மனைவி மற்றும் 2 வயது மகன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

“பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆரம்ப சிகிச்சை அளித்த தீயணைப்புப் படையினர், அவர்களை மேலதிக சிகிச்சைக்காக மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்தனர்,” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here