குடல் அழற்சி பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாட் சாபு

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது சாபு, குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு இன்று இரவு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

அவர் இன்று அதிகாலை புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகமதுவின் உடல்நிலை தீவிர கண்காணிப்புடன் தற்போது சீராக இருப்பதாக அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட் சாபு என்று அழைக்கப்படும் முகமது 68, ஆளும் கூட்டணியின் பங்காளியான அமானாவின் தலைவராக உள்ளார். மேலும் டிசம்பரில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here