கோலாலம்பூர்: தியாகத் திருநாள் உதவியாக 1,500 ரிங்கிட் வழங்குவதாக சுவரொட்டி பரப்பப்பட்டதில் உண்மையில்லை என தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தை ஃபஹ்மி இன்று தனது முகநூல் பக்கத்தில் அறிவித்தார். செய்தி தவறானது, அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் படத்தைக் காட்டிய பொய்யான தகவல் அடங்கிய போஸ்டரையும் ஃபஹ்மி பகிர்ந்துள்ளார். மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 29 அன்று தியாகத் திருநாளை கொண்டாடுவார்கள்.