பாகன் அஜாம், பட்டர்வொர்த் பகுதியை சுற்றியுள்ள சாலையில் (BORR) இன்று நடத்தப்பட்ட தெருக் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் மொத்தம் 54 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 290 தண்டங்களும் வழங்கப்பட்டன என்று செபெராங் பிறை உதாரா மாவட்ட காவல்துறை தலைவர் (SPU), துணை ஆணையர் முகமட் ராட்ஸி அஹ்மட் கூறினார்.
இந்த நடவடிக்கை SPU போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவினால் இரவு 11.45 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் “18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்ததற்காகவும், சத்தம் போட்டதற்காகவும் கைது செய்யப்பட்டனர் என்றார்.
“அது தவிர, மோட்டார் சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத குற்றங்களுக்கு தண்டம் வழங்கப்பட்டது” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் எந்த தரப்பினருடனும் காவல்துறை சமரசம் செய்து கொள்ளாது என்று முஹமட் ராட்ஸி வலியுறுத்தினார்.