தாமான் மூடா கடைவீதியில் இறந்த ஆடவரின் உடலை கண்டெடுத்த தீயணைப்பு வீரர்கள்

கோலாலம்பூர்: கடைவீதின் கதவைத் திறக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்புப் படையினர் இன்று காலை ஒரு அறையில் ஆடவர் ஒருவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறுகையில், பாண்டன் நிலையத்தில் இருந்து ஐந்து தீயணைப்பு வீரர்கள் காலை 9.01 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததையடுத்து தாமான் மூடா வளாகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

கட்டளை அதிகாரி  மூடா தலைமையிலான குழுவினர் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்தனர். அம்பாங் மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி கேட்டைத் திறக்க உதவினார்கள்.

40 வயது மதிக்கத்தக்க ஆடவரின் உடல், அறை ஒன்றில் படுக்கைக்கு அருகில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்களால் அவர் இறந்துவிட்டதாகச் சான்றளிக்கப்பட்டார் என்று அவர் கூறினார். மேலும் இந்த வழக்கு மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here