நாங்கள் அதை சமாளிப்போம், ‘அரசியலமைப்புக்கு முரணான’ ஓய்வூதிய சட்டம் குறித்து பிரதமர் கருத்து

கோலாலம்பூர்: அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று கடந்த வாரம் கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அரசாங்கம் அறிவிப்பை வெளியிடும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாங்கள் அதை சமாளிப்போம். நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்க வேண்டும். ஆனால் ஓய்வூதியம் பெறாதவர்களை பாதுகாக்க எங்களிடம் சில யோசனைகள் உள்ளது என்று அவர் இன்று இங்கு நடந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

நிதியமைச்சராக இருக்கும் அன்வாரிடம், ஓய்வூதிய சரிசெய்தல் (திருத்தப்பட்ட) சட்டத்தின் திருத்தங்களை ரத்து செய்வதற்கான கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவின் நிதி தாக்கங்கள் குறித்து கேட்கப்பட்டது. திருத்தங்கள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஆண்டுதோறும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை 2% அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here