மலேசிய- இந்திய இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக மலேசியா வருகிறார்.
வரும் திங்கட்கிழமை (ஜூலை 10) தொடங்கும் பயணத்தின் போது அவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சந்திப்பார் என்றும், அத்தொடு மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று சனிக்கிழமை (ஜூலை 8) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.