கிள்ளான் நகை கடையில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளை முயற்சி குறித்து காவல்துறை விசாரணை

 இன்று காலை கிள்ளான் ஜாலான் தெங்கு கெலானாவில் உள்ள ஒரு நகை கடையில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. தென்கிள்ளான்  துணை காவல் தலைவர் கமலாரிஃபின் அமன் ஷா, இந்தச் சம்பவம் காலை சுமார் 10.30 மணியளவில் நடந்ததாகக் கூறினார்.

கூட்டுக் கொள்ளை முயற்சியின் போது காயம் ஏற்படுத்தியதற்காக  தண்டனைச் சட்டத்தின் பிரிவு 394-இன் கீழும், கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது துப்பாக்கியைக் காட்டியதற்காக 1971 ஆம் ஆண்டின் துப்பாக்கிகள் (அதிகரிக்கப்பட்ட தண்டனைகள்) சட்டத்தின் பிரிவு 4-இன் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்த எவரும் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இணையத்தில் பரவி வரும் சிசிடிவி காட்சிகளில், இரண்டு நபர்கள் சுத்தியல்களைக் கொண்டு கடையின் காட்சிப் பெட்டிக் கண்ணாடியை உடைக்க முயற்சிப்பதும், மற்றொருவர் கைத்துப்பாக்கி போன்ற ஒரு பொருளை வைத்திருப்பதும் தெரிகிறது. கண்ணாடியை உடைக்க முடியாமல் போனதால் தப்பி ஓடிய அந்த மூன்று பேரும், வெளியே மோட்டார் சைக்கிளில் காத்திருந்த நான்காவது நபருடன் சேர்ந்துகொண்டனர். பின்னர், அந்த நால்வரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here